சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி, பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பெருநாழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, தேர்தலின் போது வாக்களர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கமுதி காவல் நிலையத்திலும் மற்றொறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ராஜகண்ணப்பன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.