ETV Bharat / state

நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கம், வெள்ளி கொள்ளை.. தாம்பரம் அருகே பரபரப்பு! - Gold robbery in chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 5:01 PM IST

Gold robbery in Chennai: தாம்பரம் அருகே நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட கடை புகைப்படம்
கொள்ளையடிக்கப்பட்ட கடை புகைப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் - அகரம்தென் இடையேயான பிரதான சாலையில் இயங்கிவரும் பிரபல தங்க நகைக் கடையின் உரிமையாளர், நேற்று (மே.09) வழக்கம் போல் விற்பனை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கடையைத் திறந்து உள்ளே சென்றபோது கடையிலிருந்த பொருட்கள் முழுவதும் சிதறிக் கிடந்துள்ளது. மேலும் கடையின் லாக்கர் திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து காவல் துறையினர் கடையில் மேற்கொண்ட சோதனையில், கடையின் பின்புறம் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறை வழியாக, கடையின் சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையிலிருந்த 10 சவரன் தங்க நகைகளையும், 20 கிராம் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்ததுள்ளது.

அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் ரெய்டு.. தேனி போலீசார் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.