ETV Bharat / state

சென்னையில் இன்று சிஎஸ்கே - குஜராத் அணி மோதல்; நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! - Chennai Metro Extension IPL 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 1:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Chennai Metro Train Extension for IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி, இன்று இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுதாக அறிவித்துள்ளது.

சென்னை: ஐபிஎல் 2024 போட்டி, கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டிற்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடந்த 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மாலை மாலை 7.30 மணியளவில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி, 'இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இது குறித்து வெளியிட்ட தகவலில், 'சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (26.3.2024) அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை (27.03.2024 – 1.00 AM) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும் என்பதாலும் மேலும், போட்டிக்குப் பிறகு, அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) மூலம் பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன்பு, ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் இதனைப் பெற்றுகொள்ளலாம்.

மேலும், பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒருமுறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம்.

இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது. மேலும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2வது கட்ட அட்டவணை வெளியீடு - சிஎஸ்கே மோதும் ஆட்டங்கள் முழு விபரம்! - IPL CSK Schedule

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.