ETV Bharat / state

"அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார்" - கே.பி.முனுசாமி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 4:40 PM IST

Etv Bharat
Etv Bharat

K.P.Munusamy: அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும் அதனைப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

"அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார்" - கே.பி.முனுசாமி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, "அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி விட்டோம். அதிமுக தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த பின் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம்.

தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அண்ணாமலை உணர்வார். அவர் என் மண் என் மக்கள் என்பதை விட்டுவிட்டு, சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றைப் பிழையோடு கூறக்கூடாது.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தென் மாநிலங்களில் பாஜக கிடையாது. ஜெயலலிதா தான் பாஜகவைத் தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார். அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய் மற்றும் அத்வானி. இருவரையும் சென்னை மெரினாவுக்கு அழைத்து வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை ஜெயலலிதா தலைமையேற்று நடத்தினர்.

வடமாநிலத்தில் மட்டும் இருந்த பாஜகவைத் தென் மாநிலத்தில் ஜெயலலிதா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழருக்கான உரிமையைத் தர மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அந்த கட்டிடமும், அந்த அமைப்பும் நாங்கள் உருவாக்கிக் கொடுத்தது என்பதை அண்ணாமலைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை பேச்சைப் பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யை வாழ்த்தித் தான் நரேந்திர மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசுவதில்லை. வாஜ்பாய் மறுக்கடிக்கப்படுகிராரா அல்லது மறந்து விடுகிறார்களா என தெரியவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர். "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்எல்ஏவின் மகனும் மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டார்கள். அதற்கு அடுத்ததாகப் பத்திரிகையாளர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் இந்த அமைதி இல்லாத தமிழகத்தைக் கண்டித்து அதிமுக வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி" - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு; ஆதாரம் கேட்கும் பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.