ETV Bharat / state

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழப்பு! - 4 Women Died

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 9:28 PM IST

Vellore
வேலூர்

4 women drowned in a lake: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா (45), அவரது மகள் லலிதா (22), அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை உட்பட 4 பெண்கள், இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர்.

வழிபாடு முடிந்த நிலையில், கோயிலுக்கு அருகே உள்ள ஏரியில் 4 பெண்களும் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, 4 பெண்களும் எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி மூழ்கியுள்ளனர். நீரில் மூழ்கிய 4 பெண்களும் உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி 4 பெண்களின் உடலையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: “திமுக Vs அதிமுக இல்லை.. இனி பாஜக Vs திமுக" - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி! - Bjp Vs Dmk

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.