ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; 4 பேர் நேரில் ஆஜர்! - Kodanad case investigation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 12:34 PM IST

Etv Bharat
Etv Bharat

Kodanad Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் உள்பட நான்கு பேர் இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு நேரில் ஆஜராகினர்.

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனிப்படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் மறுவிசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ், காய்கறி சப்ளை செய்து வந்த தேவன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானின் வீட்டில் வசித்து வந்த ரவிக்குமார் மற்றும் நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கு இன்று ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நான்கு பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி உள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் துணை ஆணையர் முருகவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு; சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சிறப்புக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.