ETV Bharat / state

வானிலை நிலவரம்: தமிழகத்தில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும் என ஆய்வு மையம் தகவல்! - TAMILNADU WEATHER REPORT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 7:42 PM IST

chennai
சென்னை

Weather Update: தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 06) வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பதிவான மழை அளவு (செ.மீ): சிற்றாறு-I (கன்னியாகுமரி) 4, சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. புதுச்சேரியில் இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 3-3.5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39–41 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33–37 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23–29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதே போல் ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.4 டிகிரி செல்சியஸ், சேலத்தியில் 40.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2 டிகிரி செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மதுரை நகரம், திருச்சி, நாமக்கல், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

அதேபோல் கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம், பாளையம்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

  • 05.04.2024 மற்றும் 06.04.2024: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  • 07.04.2024: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  • 08.04.2024: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  • 09.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 10.04.2024 மற்றும் 11.04.2024: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில் 2–3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39–41 டிகிரி செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37–39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34–37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவிதமாகவும், மற்ற நேரங்களில் 40-75 சதவிதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 சதவிதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இதையும் படிங்க: பிரச்சாரத்தின் போது அழுத ஜோதிமணி.. ஆறுதல் கூறிய பொது மக்கள்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.