ETV Bharat / state

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 5:49 PM IST

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி வழக்கு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி வழக்கு

Senthil Balaji case: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீதான விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14இல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 26வது முறையாக நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.