ETV Bharat / state

"எல்.முருகனிடம் பேசியதன் விளைவை டி.ஆர்.பாலு சந்திப்பார்" - அண்ணாமலை தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 10:04 AM IST

Updated : Feb 7, 2024, 7:46 PM IST

TN BJP president Annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

TR Balu vs L Murugan: நாடாளுமன்றத்தில் அமைச்சர் எல்.முருகனை இழிவாகப் பேசியதற்கு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை டி.ஆர்.பாலு எங்கு சென்றாலும் அவரக்கு எதிராக கருப்பு கொடி காட்ட பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

ராணிப்பேட்டை: தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.7) ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை விமர்சனம் செய்த திமுகவின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு, அவரை 'தகுதி அற்ற அமைச்சர்' எனக் கூறியது மிகவும் கண்டனத்திற்குரிய பேச்சு. இதற்காக டி.ஆர்.பாலு பொது இடத்தில் அமைச்சர் எல்.முருகனிடம் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

டி.ஆர்.பாலு, எல்.முருகனை மட்டும் தவறாக பேசவில்லை. ஒட்டுமொத்த பட்டியலின மக்களையும் இழிவாக பேசியுள்ளார். தகுதியான அமைச்சருக்கான விளக்கம் என என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, டி.ஆர்.பாலு இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை தமிழகத்தில் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சர் ஆர்.காந்தி குறித்து பேசிய அண்ணாமலை, "எம்.எல்.ஏ.காந்திக்கு 10% அமைச்சர் என்று வேறு பெயர் உண்டு. அவ்வப்போது புதிதாக ஊழலில் ஈடுபடுவார். பொங்கலுக்கு திமுக அரசு கொடுத்த வேட்டிகளில் 100% பருத்தி இருக்க வேண்டும்; ஆனால், அதை தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (The South India Textile Research Association - SITRA)) ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் 78 சதவீதம் பாலிஸ்டர் மற்றும் 22 சதவீதம் பருத்தி அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாஜக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களோடு புகார் அளிக்கவுள்ளோம். அதற்கான ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் பகிரவும் உள்ளோம். இப்போதாவது, அமைச்சர் காந்தி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் காந்தியில் ஊழலுக்கு தக்க தண்டனை கிடைக்குமா? என்பதை எதிர்பார்த்து உள்ளோம்" எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து கனிமொழி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கூறிய கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கனிமொழி, அவரது தந்தை எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்பதை காரணங்களோடு குறிப்பிட்டிருந்தார். ஆனால், கனிமொழியும், மு.க.ஸ்டாலினும் அவர்களது தந்தை எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும்' என விமர்சித்துள்ளார்.

பின்னர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் புற்று நோயால் பாதிக்கப்படுவது குறித்து பேசிய அவர், இப்பகுதியில் மக்கள் அதிக அளவில் புற்றுநோய் பாதிக்கப்படுவதற்கு காரணம், '1975ஆம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்த குரோமைட் தொழிற்சாலை தான். இன்று வரையிலும் ராணிப்பேட்டை பகுதியில் குரோமியம் பரவியுள்ளது என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது' என கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?

Last Updated :Feb 7, 2024, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.