ETV Bharat / state

தென் சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் புகார்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 9:55 PM IST

தென் சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் புகார்
தென் சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் புகார்

lok sabha election 2024: திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி, அதிமுகவினர் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேனாம்பேட்டை கணபதி காலனி 3வது தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாகவும், அதிமுக பூத் ஏஜெண்டுக்களை வாக்குச்சாவடியிலிருந்து அடித்து வெளியே விரட்டி கள்ள ஓட்டுப் போட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: "இறுதி வாக்காளர் வாக்கு அளிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்" - சத்யபிரதா சாகு - SATYABRATA SAHOO PRESS MEET

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.