ETV Bharat / state

சென்னை- குவைத் இடையே கூடுதல் விமானச் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 3:06 PM IST

சென்னை- குவைத் இடையே கூடுதல் விமான சேவை
சென்னை- குவைத் இடையே கூடுதல் விமான சேவை

Chennai kuwait flight: சென்னை-குவைத் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், இன்று (மார்ச்.03) முதல் கூடுதலாக விமானச் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

சென்னை: சென்னையில் இருந்து குவைத்துக்கு இதுவரை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ், ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்கள், சென்னை- குவைத்- சென்னை இடையே நேரடிப் பயணிகள் விமானச் சேவைகளை இயக்கி வந்தன.

இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், இன்று முதல் சென்னை- குவைத் இடையே, புதிய பயணிகள் விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வாரத்தில் 5 நாட்கள், செவ்வாய், சனிக்கிழமை தவிர, மாலை 6:50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு குவைத்திற்குச் செல்கிறது.

அந்த விமானம் மீண்டும் குவைத்தில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு, காலை 6:35 மணிக்கு சென்னைக்கு வந்து சேர்கிறது. இப்போது இந்த விமானம் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி விமானமாக விரைவில் இயக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து இனிமேல், சென்னையில் இருந்து குவைத்துக்கு நேரடி விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 5 விமானங்கள் குவைத் சென்று வருவதால், தொழில், வர்த்தகம் உட்படப் பல்வேறு பணிகளுக்காக, குவைத்துக்குச் செல்லும் பயணிகளுக்கு, மிகவும் வசதியாக இருக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் அருகே வீட்டில் பட்டாசு வெடிவிபத்து; ஒருவர் உடல் சிதறி பலியான சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.