ETV Bharat / state

சென்னையில் சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் தந்த 3 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை - POCSO CASE IN CHENNAI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 7:17 AM IST

POCSO CASE IN CHENNAI
சென்னை போக்சோ வழக்கு

POCSO CASE IN CHENNAI: சென்னையில் இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த மூன்று குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த 2 சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்தது தொடர்பாக, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.

இதனையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 19 வயது, 21 வயது, 25 வயது என மூன்று நபர்களையும் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் 19 வயது, 21 வயது, 25 வயது என 3 நபர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3 குற்றவாளிகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.60,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனைப் பெற்று தந்த சைதாப்பேட்டை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரைக் காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.