ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் - மீட்பு பணி தீவிரம்! - Boy Fell Borewell at karnataka

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 10:44 PM IST

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

விஜயபுரா : கர்நாடக மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பீஜாபூர் மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லச்சியனா கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் முஜகொண்டா - பூஜா முஜகொண்டா தம்பதியினர். இவர்களது இரண்டு வயது சாத்விக் முஜகொண்டா.

தனது 4 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து உள்ள சதீஷ் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறி தோண்டி உள்ளார். தண்ணீர் கிடைக்காத நிலையில், ஆழ்துளை கிணற்றை சரியாக மூடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 19 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் விடுதலை! - Indian Fishermens Released

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.