அகமதாபாத் : குஜராத் மாநிலம் கெடா மாவட்டம் நாடியாட் டவுன் அடுத்த அகமதாபாத் - வதோதரா விரைவுச் சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிரக் மோதி மோதி கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 10 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய நாடியாட் எம்எல்ஏ பங்கஜ் தேசாய், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையில் இடது புறத்தில் டிரக் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதை கவனிக்காமல அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார். அதிவேகமாக சென்ற கார் டிரக் மீது மோதி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மக்களவை தேர்தலுக்கு முன் நக்சல் வேட்டை! என்ன காரணம்? 10 ஆண்டுகளில் இத்தனை நக்சல்கள் என்கவுன்டரா? - Naxal Encounter