ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! என்ஐஏ வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 7:25 PM IST

Updated : Apr 3, 2024, 3:30 PM IST

Etv Bharat
Etv Bharat

Rameshwaram Cafe blast case: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது.

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 9 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வெளியிட்டு உள்ளது.

மேலும், இரண்டு செல்போன் எண்கள் மற்றும் இமெயில் ஐடி வெளியிட்டு உள்ள என்ஐஏ சந்தேகப்படும் நபர் குறித்து பொது மக்கள் தாமாக முன்வந்து தகவல்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ தனது எக்ஸ் பக்கத்தில் "ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும், பொது மக்கள் 08029510900, 8904241100 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது info.blr.nia@gov.in க்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் அடையாளம் ரகசியமாக இருக்கும்" என்று பதிவிட்டு உள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் குறித்த இரண்டு வீடியோக்களை வெளியிட்ட என்ஐஏ அதிகாரிகள், இது தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.

வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கும் நபர் துமகுரு, பல்லாரி, பிதார் மற்றும் பட்கல் பகுதிகளுக்கு மாநகர பேருந்து மூலம் பயணித்ததும், தனது அடையாளத்தை வெளிக் கொணராத வகையில் முக கவசம், தொப்பி உள்ளிட்டவைகளை கொண்டு மறைத்ததும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கடந்த வாரம் ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடை ஊழியர்கள் உள்பட ஏறத்தாழ 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு குறித்து பெங்களூரூ மாநில குற்றப்பிரிவு போலீசார் சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், என்ஐஏ அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த 9 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கபே மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!

Last Updated :Apr 3, 2024, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.