ETV Bharat / bharat

கான்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:52 AM IST

Etv Bharat
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

Kanpur Road Accident: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தல்பூர் சாலையில் அமைந்துள்ள ஜெகநாத்பூர் கிராமம் அருகே இன்று (பிப்.5) அதிகாலை நடந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கான்பூர் (உத்தர பிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தல்பூர் சாலையில் அமைந்துள்ள ஜெகநாத்பூர் கிராமம் அருகே இன்று (பிப்.5) அதிகாலை நடந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்திற்கு உள்ளான குடும்பம், மத்திய பிரதேசம் மாநிலம் புல்கானில் இருந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, காரில் திரும்பி கொண்டிருந்த போது, ஜெகநாத்பூர் கிராமம் அருகே, அதிகாலை 2 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் கவிழ்ந்து, விபத்து உள்ளானது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் காயமடைந்த நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் உயிரிழந்த 6 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல் கண்காணிப்பாளர் பி.பி.ஜி.டி.எஸ் மூர்த்தி, இந்த குடும்பம் மத்திய பிரதேசம் மாநிலம் புல்கானில் இருந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் பள்ளி சிறுமி தற்கொலை: சக மாணவன் போக்சோவில் கைது - நடந்தது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.