சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 100 அடி கம்பத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமி நாதன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஜே.ஆர்.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.