தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.21) சென்னையில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.