தமிழ்நாடு

tamil nadu

பரோட்டா சாப்பிட்டதால் கர்ப்பிணி பலி!

By

Published : Dec 7, 2021, 12:41 PM IST

அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி பகுதியில் பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pregnant-deaths-due-to-eating-parotta
pregnant-deaths-due-to-eating-parotta

விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ளது வதுவார்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் வசிப்பவர் அனந்தாயி(26).இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அனந்தாயிக்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால் சாலையோரம் உள்ள கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : செல்போனில் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details