தமிழ்நாடு

tamil nadu

தேசிகாபுரம் ஊர் நாட்டாமை கொலை - 10 பேர் கைது

By

Published : Jan 30, 2020, 1:31 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் முன்னாள் ஊர் நாட்டாமை கொலை செய்யப்பட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட பத்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

விருதுநகர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட ஊர் நாட்டாமை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே அவ்வூரில் நடைபெறும் தேசிய அம்மன் கோயில் வழிபாட்டையொட்டி, கடந்த ஆறு ஆண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து வந்துள்ளன.

விருதுநகரில் ஊர் நாட்டாமை கொலை

இதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தின் வடக்கு தெரு முன்னாள் ஊர் நாட்டாமையாக இருந்த தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம்

இக்கொலை சம்பந்தமாக தளவாய்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், பால்பாண்டி என்பவரைத் தவிர, புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம், குமார், பால்பாண்டி, ராமராஜ், அண்ணபிரகாஷ், பாலகிருஷ்ணன், சந்திரசேகர், ரமேஷ் முத்துக்குமார், ராமசாமி, சக்திவேல் உள்ளிட்ட பத்து பேரை இன்று கைது செய்தனர்.

இதையும் படிங்க: விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது

Intro:விருதுநகர்
30-01-2020

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் முன்னாள் ஊர் நாட்டாமை கொலைவழக்கில் புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் உட்பட 11 நபர்கள் மீது வழக்கு பதிவு 10 பேர் கைது.

Tn_vnr_01_murder_Accused_arrest_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் கிராமத்தில் ஒரே சமுதயத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கிடையே தேசிய அம்மன் கோவில் வழிபாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் வடக்குத்தெரு முன்னாள் ஊர் நாட்டாமையாக இருந்த தங்கவேல் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பந்தமாக தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், குமார், பால்பாண்டி, ராமராஜ், அண்ணபிரகாஷ், பாலகிருஷ்ணன், சந்திரசேகர் ,ரமேஷ் முத்துக்குமார் ,ராமசாமி, சக்திவேல், உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து பால்பாண்டியை தவிர மற்ற 10 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details