ETV Bharat / state

விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது

author img

By

Published : Jan 24, 2020, 10:09 PM IST

விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் போல் கையெழுத்திட்டு போலியான அரசு பணி ஆணை வழங்கிய அரசு அலுவலரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது
விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (33). இவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் தலா மூன்று லட்சம் ரூபாய்வரை இவர் வசூலித்தள்ளார்.

பணம் கொடுத்துவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோரின் கையெழுத்துக்களைப் போலியாக போட்டு, போலியான அரசு பணி ஆணை தயாரித்து வழங்கியுள்ளார்.

இதை அறிந்த அவர்கள் மேலும் மூன்று பேருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்க வேண்டும் எனக்கூறி நாகேந்திரனிடம் பேசி, அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து விருதுநகர் மேற்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விருதுநகரில் மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது

இதையும் படிங்க: அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!

Intro:விருதுநகர்
24-01-2020

மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு
போலியாக அரசு பணியாணை வழங்கல்
மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர் கைது

Tn_vnr_09_cheating_case_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்ட ஆட்சியர் போல் கையெழுத்திட்டு போலியான அரசு பணி ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அரசு அலுவலர் ஒருவரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (33). நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.3 லட்சம் என 60 வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுத்துவர்களுக்கு தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆகியோரின் கையெழுத்துக்களைப் போலியாக போட்டு, போலியான அரசு பணி ஆணை தயாரித்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த நபர்கள் நாகேந்திரனைத் தேடி வந்த நிலையில், விருதுநகரில் அவர் இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர், ஏமாற்றமடைந்த நபர்கள் மேலும் மூவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி நாகேந்திரனிடம் பேசி, அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து சுற்றி வளைத்துப் பிடித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட நாகேந்திரனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.