தமிழ்நாடு

tamil nadu

Muthaneri VAO Assistant Suicide: கிராம நிர்வாக உதவியாளர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை

By

Published : Jan 3, 2022, 5:11 PM IST

Muthaneri VAO Assistant Suicide: முத்தனேரி கிராம நிர்வாக உதவியாளர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிர்வாக உதவியாளரின் காணொலி
கிராம நிர்வாக உதவியாளரின் காணொலி

Muthaneri VAO Assistant Suicide: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பள்ளிமடத்தைச் சேர்ந்த விநாயகசுந்தரம்.

இவர் கடந்த 31ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 2) நள்ளிரவில் தனது வீட்டில் விநாயகசுந்தரம் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல

காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்றனர்.

கிராம நிர்வாக உதவியாளரின் காணொலி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விநாயகசுந்தரத்தின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:திமுக அரசு வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details