தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக நிர்வாகி கைது

By

Published : Jul 29, 2021, 8:55 PM IST

தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்து, பெண்களை ஆபாசமாகச் சித்திரித்து ட்விட்டரில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி சைபர் கிரைம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர்: திருச்சுழி அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி. இவரது மகன் தென்னரசு. இவர் அதிமுக ஒன்றிய விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார்.

இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகைகள், பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாகப் பதிவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்ப்பட்ட அதிமுக நிர்வாகி தென்னரசு

இதனையடுத்து அவர் சைபர் கிரைம் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு, திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரது அலைபேசியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், ஆபாச, அவதூறு பதிவுகள் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து ரூ.10 லட்சம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details