தமிழ்நாடு

tamil nadu

சிவகாசி அருகே தூக்கில் தொங்கிய கள்ள காதலர்கள்...

By

Published : May 11, 2022, 2:31 PM IST

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கள்ளக்காதல் விவாகரத்தில் ஆண்,பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தூக்கில் தொங்கிய இரண்டு கள்ளாக் காதலர்கள்: சிவகாசி அருகே பரபரப்பு
தூக்கில் தொங்கிய இரண்டு கள்ளாக் காதலர்கள்: சிவகாசி அருகே பரபரப்பு

விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரஸ்வதி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சரஸ்வதிக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்தச் சூழலில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த செந்தில்குமார் மாலை நேரத்தில் தனது மனைவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்தவர்கள் திருத்தங்கல் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதி மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது-

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணம் மீறிய உறவினால் ஏற்பட்ட கொலை: ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details