இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதூரை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருவதற்கு முன்பு தற்பாதுகாப்பு, பொதுசுகாதாரத்துக்காக கண்டிப்பாக முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.