தமிழ்நாடு

tamil nadu

மூளைச்சாவு: இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

By

Published : Aug 3, 2022, 9:41 PM IST

Etv Bharat மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
Etv Bharat மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.

விழுப்புரம்:பெருவளூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் விவசாயி லீலா வினோதன் (23). இவர், கடந்த மாதம் 28ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.

இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று (ஆக.02) மூளைச்சாவு அடைந்தார். இதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்த நிலையில் அதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

அதன்படி அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் தனமாக பெறப்பட்டது. கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் நாராயணி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை சிம்ஸ் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இளைஞரை கொடூரமாக கொலை செய்த கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details