தமிழ்நாடு

tamil nadu

ஆட்டோ மரத்தில் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயம்

By

Published : Nov 7, 2019, 9:14 AM IST

Updated : Nov 7, 2019, 11:26 AM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே சாலையோர மரத்தின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

kallakurichi accident

கள்ளக்குறிச்சி அருகே அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள், சின்னபொண்ணு, பெரியம்மாள், கவிதா, சரோஜா உள்ளிட்ட 11 பேர் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் முன்பு நாற்று நடும் பணியை முடித்துவிட்டு ஆட்டோ ஏரி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அம்மாபேட்டை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்திலிருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஆட்டோவில் சென்ற 11 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆட்டோ மரத்தில் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயம்!

இந்த விபத்து குறித்து கச்சிராயபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க :'திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்த்தப்படுவதால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை' - திருநாவுக்கரசர் எம்.பி!

Last Updated : Nov 7, 2019, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details