தமிழ்நாடு

tamil nadu

’சுஜித்’ என்று பகிரப்படும் வேறொரு சிறுவனின் புகைப்படம்: பெற்றோர் வேதனை

By

Published : Oct 31, 2019, 8:21 AM IST

Updated : Oct 31, 2019, 11:56 AM IST

sujith ()

வேலூர்: ’சுஜித்’ புகைப்படத்திற்கு பதிலாக உயிருடன் உள்ள தங்கள் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக நித்திஷ் என்ற சிறுவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ’சுஜித்’ என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மனதில் ஒரு நீங்கா துயரமாக எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் ’சுஜித்’ என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில், உயிரிழந்த சுஜித்திற்கு பதிலாக தவறுதலாக வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த முனிவேல் - சுகன்யா தம்பதியினரின் இரண்டு வயது மகன் ’நித்திஷ்’ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இதில் நித்திஷ் நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ’சுஜித்’ என்று வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

சுஜித் என நினைத்து தவறுதலாக பகிரப்படும் நித்திஷின் புகைப்படம்
உயிரிழந்த சுஜித்தின் உண்மையான புகைப்படம் இதுதான்

உயிருடன் உள்ள தனது மகன் நித்திஷ் புகைப்படங்கள் இறந்துவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று நித்திஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

நித்திஷின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை

மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து தன்னுடைய மகன் புகைப்படங்கள் நீக்கப்பட வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சுஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குக!’ - திருமா கோரிக்கை

Intro:ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுர்ஜித் புகைப்படத்திற்கு பதிலாக உயிருடன் உள்ள வேறொரு சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு உயிருடன் உள்ள சிறுவனின் குடும்பத்தார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Body:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மனதில் ஒரு நீங்கா துயரமாக எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் சுஜித் என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் உயிரிழந்த சுர்ஜித் என்ற சிறுவனுக்கு பதிலாக
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனிவேல் சுகன்யா தம்பதியினரின் 2 வயது மகன் நித்திஷ் உடைய புகைப்படங்கள் அந்த சிறுவன் நடனம் ஆடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பபட்டு வருகிறது.
இதனால் உயிருடன் உள்ள தனது மகன் நித்திஷ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கண்ணீர் மல்க அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் இருந்து தன்னுடைய மகன் புகைப்படங்கள் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
Last Updated :Oct 31, 2019, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details