தமிழ்நாடு

tamil nadu

"கூட்டுறவுத் துறையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் " - அமைச்சர் துரைமுருகன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 8:55 AM IST

Minister Duraimurugan: காட்பாடியில் நடைபெற்ற அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்கிற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் துரைமுருகன்

வேலூர்:வேலூர் அடுத்த காட்பாடியில் கூட்டுறவுத்துறை சார்பில் 70வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பின்னர் பயனாளிகளுக்கு 17.42 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அதனை அடுத்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கடனை நாங்கள் கொடுக்கிறோம். ஆனால், அதை திருப்பிக் கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை விட, கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்ற கோஷம்தான் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

அப்படி மக்கள் நினைத்தால், கூட்டுறவுத் துறையும் நிற்காது, அரசாங்கமும் நிற்காது. மற்ற இடங்களில் கடன் வாங்கினால் மட்டும், மக்கள் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்துகின்றனர். கூட்டுறவுத் துறையில் கடனை வாங்கினால், அதனைத் திருப்பி கட்ட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கோரிக்கை.

கடன் வாங்கும்போதே தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத் துறையில் மக்கள் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இன்று மட்டும் 2 ஆயிரத்து 547 பேருக்கு கடன் தொகையாக 17.42 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. நீங்கள் எள் என்றால், கூட்டுறவுத்துறை உங்களுக்கு எண்ணெய்யாக கடன் தர தயாராக இருக்கிறது" என்று பேசினார்.

இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன் அமலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குண ஐயப்பதுரை ஆகியோர் உள்பட ஏராளாமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சென்னை ரேஸ் கிளப்பிற்கு வாடகை உயர்த்தப்பட்ட விவகாரம்... தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details