தமிழ்நாடு

tamil nadu

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மரம் விழுந்ததில் தந்தை,மகன் படுகாயம்

By

Published : Aug 5, 2022, 9:41 AM IST

மழை காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இருவர் படுகாயம்
மழை காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இருவர் படுகாயம் ()

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.

வேலூர்: குடியாத்தம் அடுத்த மத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (48) இவர் தனது மகன் கோபியுடன் (22) குடியாத்தத்தில் இருந்து சொந்த ஊரான பரதராமி மத்தூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மழை காரணமாக தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் வேரோடு சாய்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன், மகன் கோபி மீது விழுந்தது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பரதராமி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details