தமிழ்நாடு

tamil nadu

திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் கரோனா கட்டுப்பாடு!

By

Published : Dec 24, 2022, 6:17 PM IST

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை
திருச்சி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகளில் இரண்டு விழுக்காடு நபர்களுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை செய்து பிஎஃப் 7 வகை தொற்று பாதிப்பு உள்ளதா என கண்டறியும் வகையில் இன்று முதல் பரிசோதனை தொடங்கியுள்ளது.

பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் மற்றும் சோதனை நடத்தக் கூடியவர்கள் பட்டியலை விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்க உள்ளனர். BF.7 வகை கரோனா வைரஸ் பரவலை தடுக்க இரண்டு சதவீதம் என்பது சுமாராக 20 வெளிநாட்டு பயணிகளிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் மதியம் 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த 151 பயணிகளில் 4 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க:அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்துவோம்.. ஓபிஎஸ் தரப்பு உறுதிமொழி..

ABOUT THE AUTHOR

...view details