தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 5:16 PM IST

Farmers Protest: திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் 46ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக மாநில முதலமைச்சர் சீத்தாராமையா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம்
கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம்

கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம்

திருச்சி:சிந்தாமணி அண்ணா சிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக, மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகளை வைத்தும், நாமம் போட்டும், வாயில் எலியை கடித்தும், வாயில் வாழைப்பழத்தை வைத்தும், ஆதிவாசி உடை அணிந்தும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 45ஆவது நாளான நேற்று (செப்.16) விவசாயிகளுக்கு மத்திய அரசு மொட்டை அடித்து விட்டதாகக் கூறி, மொட்டை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் 46ஆவது நாளான இன்று (செப்.17) விவசாயிகள், கர்நாடகா மாநில முதலமைச்சர் சீத்தாராமையா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகள்:

  • 2016ஆம் ஆண்டில் நிலவிய வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக்கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமல் போலியாக கையெழுத்தை போட்டு மத்திய காலக்கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
  • மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
  • அதேபோல் ஆலடியாறு அணையில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது. காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறோம்.
  • விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டும்:இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அய்யாகண்ணு, “தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், அம்மாநிலத்தின் முதலமைச்சர் சீத்தாராமையா உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஆதரவாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details