தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் பரபரப்பு - டிரைவர் வெட்டிக் கொலை

By

Published : Sep 16, 2021, 12:18 PM IST

கொலை
கொலை

திருச்சி: பொன்மலைப்பட்டி கடைவீதியில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சின்ராசு (24). டிரைவராக பணியாற்றிய இவர் நேற்றிரவு பொன்மலைப்பட்டி கடைவீதியில் நடந்து சென்றார். அப்போது நான்கு பேர் அடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் ஜெயராமனை சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே சின்ராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சின்ராசுவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. மனைவி யுவரஞ்சனி. குழந்தைகள் இல்லை. ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அலெக்ஸ் மற்றும் தரசு ஆகியோர் குறித்து காவல் துறையினருக்கு சின்ராசு தகவல் அளித்துள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details