தமிழ்நாடு

tamil nadu

முதியவர் அடித்துக் கொலை: இருவர் கைது

By

Published : Aug 24, 2021, 10:55 AM IST

Murder
Murder ()

காட்டுமன்னார்கோவில் அருகே மதுபோதையில் முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56).

இவர் தனது குடும்பத்தினருடன் மகள் திருமணம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது இவரின் வீட்டின் அருகில் இருந்த அர்ஜுனன் மகன்கள் சுந்தர்ராஜன்(36), ராமகிருஷ்ணன்(33), ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் சென்று இரவு நேரத்தில் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி மது போதையில் கேட்டுள்ளனர்.

தாக்குதல்

இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன் இரும்பு கம்பியால் ராஜேந்திரனை தலையில் கடுமையாக தாக்கினர்.

கைது செய்யப்பட்டவர்
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஆபத்தான நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கைது

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் உறவினர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்
மேலும் தப்பி ஓடிய சுந்தர்ராஜன், ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : பட்டா கத்தியை காட்டி டூ வீலரை பிடுங்கிச் சென்ற இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details