திருப்பூர்:சேவூர் போத்தம் பாளையம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பெண் ஒருவர் அளித்த தகவலின் படி, அப்பகுதியில் வித்தியாசமான காலடித்தடம் இருப்பதால் அது சிறுத்தையின் காலடித்தடமா? அல்லது செந்நாய்களின் காலடித்ததடமா என அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேவூர் அருகே போத்தம் பாளையம் என்கிற பகுதி உள்ளது. போதம்பாளையம் பகுதியில் இருந்து புலிப்பார் செல்கின்ற சாலையில் இன்று மதியம் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இரண்டு சிறுத்தைகளை அவர் கண்டிருக்கிறார். இதை எடுத்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் பெயரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார். வனத்துறையினர் வந்து அந்த பகுதியை ஆய்வு செய்தார்கள். சிறுத்தைகள் ஏதும் அந்த பகுதியில் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்த நிலையில், சிறுத்தை ஏதும் தென்படவில்லை.