தமிழ்நாடு

tamil nadu

நாட்றம்பள்ளி அருகே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதி

By

Published : May 14, 2022, 10:36 AM IST

நாட்றம்பள்ளி அருகே இரு வேறு இனம் சார்ந்த காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்-பெற்றோர்கள் எதிர்ப்பு
நாட்றம்பள்ளி அருகே இரு வேறு இனம் சார்ந்த காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்-பெற்றோர்கள் எதிர்ப்பு ()

திருப்பத்தூர் அருகே பாதுகாப்பு கோரி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.

திருப்பத்தூர்:அடுத்த பொம்மநாயக்கன்பட்டி மோலை வட்டம் பகுதியில் வசிப்பவர் சூர்யா (21). நாட்றம்பள்ளி அடுத்த எம்ஜி நகரில் வசிப்பவர் அண்ணாமலை மகள் அபிலாஷா (21)

இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் நாட்றம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் போது காதல் வயப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி சூர்யாவும் அபிலாஷாவும் வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் காந்திநகர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

தகவலறிந்து அபிலாஷாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து விடுங்கள் நாங்களே ஊரறிய திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி காதல் தம்பதி இருவரும் நாட்றம்பள்ளிக்கு வந்தபோது அபிலாஷாவின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவர்களை தாக்க முற்பட்டதாக தெரிகிறது.

இதனால் பதற்றமடைந்த காதல் தம்பதி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் லஷ்மி பெற்றோரிடம் பேசி அவர்களை சமரசமாக அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை உட்பட 9 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details