தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி!

By

Published : Feb 23, 2021, 11:11 AM IST

theft

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடியவரிடமிருந்து பொதுமக்கள் பணத்தை மீட்டனர், அவரைப் பிடிக்க முயன்றபோது, அந்நபர் தப்பியோடியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான் கான். இவர் கன்னிகாபுரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் 15 ஆண்டுகளாக ஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பழைய கேன்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.

நேற்று (பிப். 22) கடைக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது தன் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை, இருசக்கர வாகனத்தின் பின்னால் வைத்துள்ளார்.

பின்னர் கடைக்கு வந்த அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர், ரஹ்மான் கான், இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றபின், அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளார். இதைப் பார்த்த ரஹ்மானின் கடை ஊழியர்கள், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரைப் பிடித்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர். இதில் அந்த நபர், அவர்களைத் தாக்கிவிட்டு அங்கியிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது குறித்து காவல் துறையினர் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கேஸ் கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் உடைப்பு: திடீரென தீ பிடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details