தூத்துக்குடி: டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்கிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ணராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம்.
போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவபெருமாளை விரட்டி விரட்டி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க:சீர்காழியில் பசுவை வெட்டிய இருவர் கைது