தமிழ்நாடு

tamil nadu

நான் தனித்தீவு செல்கிறேனா? தயாரிப்பாளர் ரவீந்தர் பதில் என்ன?

By

Published : Sep 23, 2022, 10:06 AM IST

நான் தனித்தீவு செல்கிறேனா? தயாரிப்பாளர் ரவீந்தர் அளித்த சுவாரஸ்ய பதில்
நான் தனித்தீவு செல்கிறேனா? தயாரிப்பாளர் ரவீந்தர் அளித்த சுவாரஸ்ய பதில் ()

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், தான் தனித்தீவு செல்ல உள்ளதாக பரவிய தகவல் தொடர்பாக சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி:சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இத்தம்பதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று (செப் 23) தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவீந்தர் சந்திரசேகர், “ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

நான் தனித்தீவு செல்கிறேனா? தயாரிப்பாளர் ரவீந்தர் அளித்த சுவாரஸ்ய பதில்

எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலக பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனம் பெறாத வருமானத்தை, எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் வதந்தி” என கூறினார்.

இதையும் படிங்க:தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி ஆகியோர் திருமணம்!

ABOUT THE AUTHOR

...view details