தமிழ்நாடு

tamil nadu

15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

By

Published : Aug 16, 2021, 6:40 AM IST

மாவட்ட ஆட்சியர்

75ஆவது சுதந்திர தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ரூ.15 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் எஸ்பி அலுவலக வளாகத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நேற்று (ஆக.15) கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 10 பயனாளிகளுக்கு, ரூ 15.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர தின விழா

மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 76 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:75வது சுதந்திர தின விழா - தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details