தமிழ்நாடு

tamil nadu

வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் 8ஆம் நாள் நவராத்திரி விழா

By

Published : Oct 4, 2022, 6:53 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் எட்டாம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் நவராத்திரி 8ஆம் நாள் விழா
வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் நவராத்திரி 8ஆம் நாள் விழா

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில், இந்தாண்டு நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் 8ஆம் நாளான நேற்று (அக்.3) கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு, லிங்க பூஜை அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஷோடச உபச்சாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அடுத்ததாக ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடிய நிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அம்பாள் பாடல்கள் பாடிய நிலையில் மகா தீபாராதனை

இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 7ஆம் நாள் விழா கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details