திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் காலனியைச் சேர்ந்த மணிமேகலை (21) என்ற பெண் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்நிலையில் காதலித்து ஏமாற்றியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் தான் அந்த பெண்ணை கொச்சைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக புகார் தெரிவித்து தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.