தமிழ்நாடு

tamil nadu

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

By

Published : Jan 25, 2023, 8:09 PM IST

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth
youth

நெல்லை:நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியப்பன் (27) என்பவர், இன்று(ஜன.25) பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர், குறிச்சிகுளம் பகுதியில் திருநெல்வேலி-மதுரை புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்த மர்ம நபர்கள் வெள்ளியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து ஊர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தாழையூத்து போலீசார், வெள்ளியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட வெள்ளியப்பன் திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனியாக இருந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மதுரையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details