தனியாக இருந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மதுரையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

author img

By

Published : Jan 25, 2023, 8:07 AM IST

மூன்று இளைஞர்கள் கைது

மதுரை கீரைத்துரையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை: 17 வயது சிறுமியை கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி, அந்த இளைஞர் தனது உறவினர் வீட்டில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை அறிந்த கார்த்திக்கின் நண்பர்கள் ஆதி, ஹரீஸ் ஆகியோர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களின் வன்கொடுமை தொல்லை தாங்க முடியாத அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சிறுமியின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கொடூர மனம் கொண்ட கார்த்திக், ஆதி, ஹரிஷ் ஆகிய மூன்று பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனைகள் வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 2 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் ஜெயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.