தமிழ்நாடு

tamil nadu

தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்!

By

Published : Feb 19, 2023, 10:54 AM IST

திருநெல்வேலி அருகே சிறப்பு நிலைப் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு அலுவலரை கைது செய்யக் கோரி சகப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்
தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்

திருநெல்வேலி: திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக காளிமுத்து என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் இறந்த பிறகு அவருடைய வேலை கருணை அடிப்படை சட்டத்தின்கீழ், அவருடைய மனைவிக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அப்பெண், திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அங்குள்ள பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் தூய்மைப் பணியாளரான அப்பெண்ணுக்கு ஆபாசமாகப் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லை காவல் துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட அப்பெண் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில், நவராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அந்த அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பேரூராட்சி முன்பு தூய்மைப் பணியாளர் 20க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: செறிவூட்டப்பட்ட, சாதாரண அரிசி என தனித்தனி வீடியோ பதிவிட்டு மக்களை குழப்புகின்றனர்: ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details