தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஏன் தெரியுமா?

By

Published : Sep 23, 2021, 8:57 PM IST

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை ()

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி நடைபெற இருப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

தேர்தல் பணியில் சுமார் 9,000 அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை (செப்.24) முதற்கட்ட தேர்தல் பயிற்சி நடைபெற இருப்பதால், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சொத்து அபகரிப்பு - பாஜக நிர்வாகி கைது

ABOUT THE AUTHOR

...view details