தமிழ்நாடு

tamil nadu

ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் பலி - குளித்தபோது நிகழ்ந்த சோகம்!

By

Published : May 26, 2019, 12:01 AM IST

தேனி: முல்லை பெரியாற்றில் குளிக்கச்சென்ற நண்பரகள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி அல்லிநகரத்தில் வசித்து வருபவர் சுரேஷ்(25). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது நண்பர்கள் ஜெகன்(25), கார்த்திக் ஆகியோருடன் இன்று மாலை தேனி அருகே சத்திரப்பட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றார். வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்துள்ள கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து குதூகலமாக மது அருந்திவிட்டு குளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற சுரேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற ஆற்றில் இறங்கிய ஜெகனும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் இருவரும் ஆற்று நீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற கார்த்திக், இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியலாமல் போயுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.

இறந்தவர்களின் சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sample description

ABOUT THE AUTHOR

...view details