தமிழ்நாடு

tamil nadu

தேனியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.. விவசாயிகள் வேதனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 2:03 PM IST

Paddy Crops Rotten By Rains in Theni: தொடர் மழையாலும், குளங்கள் தூர்வாரப்படாததாலும் 25க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தேனியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
தேனியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பகுதியில் ஆண்டிகுளம், உருட்டி குளம் ஆகிய இரண்டு குளங்களுக்கும் இடையே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 60 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, இரு போக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், முதல் போக சாகுபடியை 25 நாட்களுக்கு முன்பாக விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஆண்டிகுளம் நிறைந்தது. மேலும் குளத்தில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறி, கீழுள்ள உருட்டி குளத்திற்கு வந்த நிலையில், நீர் செல்ல வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை சூழ்ந்துள்ளது.

இதையும் படிங்க:போடியில் மழையால் செடியிலேயே அழுகி வீணான செவ்வந்தி பூக்கள்.. டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்!

நடவு செய்யப்பட்டு 20 முதல் 30 நாட்கள் ஆன நிலையில், நெற்பயிர்களில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளது. இதனால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தற்பொழுது அழுகி வருகின்றன. முதல் போக சாகுபடியின்போது வடகிழக்கு பருவமழையால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாய நிலங்களுக்கு கீழ் உள்ள உருட்டிகுளம் தூர்வாரப்படாததாலும், விவசாய நிலங்களில் நீர் புகாதவாறு கரை அமைக்கப்படாததாலும், ஆண்டுதோறும் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இந்த பிரச்சினை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க:தேனியில் கையோடு வந்த தார் சாலை.. தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details