தமிழ்நாடு

tamil nadu

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

By

Published : Sep 20, 2021, 7:45 AM IST

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு ()

நீலகிரியில் நண்பர்களுடன் குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உள்பட்ட பாரங்கொல்லி ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (24). இவர் நேற்று (செப்.19) தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கோழிகண்டி கிராமக் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது குளிப்பதற்காக குளத்தில் இறங்கிய மணி, மூச்சுத்திணறி மூழ்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்தோர் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு மணியின் உடலை மீட்டனர். பின்னர் இளைஞரின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய சிறார் உட்பட இருவர் பிடிபட்டனர்

ABOUT THE AUTHOR

...view details