தமிழ்நாடு

tamil nadu

கோத்தகிரியில் கரடி உலா - மக்கள் அச்சம்

By

Published : Aug 16, 2021, 6:42 AM IST

கோத்தகிரியில் அதிகாலையில் உலா வரும் கரடி தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருவதால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி:குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப கா‌லமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் அதிகாலை, கரடி ஒன்று கேட்டின் மீது ஏறி இறங்கியுள்ளது.

அப்போது அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், கரடியை கண்டு அச்சமடைந்து ஒட்டம் பிடித்துள்ளனர். தற்போது கரடி உலா வருவது தொடர்பான காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.


இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: மழை எச்சரிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details